பாரதிகலை - 4
வழிமுறை கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றின் சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை அல்லது வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம். இம்முறை, அனேகர் கேள்விப்பட்டே இருக்காத பாடல் ஒன்றிலிருந்து எடுத்திருக்கிறேன். சூரியன் உதிப்பதும் பூமியில் உயிரினங்களெல்லாம் உற்சாகமடைவதும், நாம் எல்லோரும் ஒவ்வொரு நாளும் காணும் நிகழ்ச்சி. அதுவே பாரதியார் கண்களுக்குத் தாயாம் பூமியும், தந்தையாம் உதய ஞாயிறும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது! விடை கண்டுபிடிக்க இரண்டு வார இறுதிகள் இருக்கின்றன. புதிரை முழுதும் கண்டுபிடித்து விட்ட பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் கிடைக்கும். அதை பின்னூட்டத்தில் இடவும். மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமாகவும் அனுப்பலாம்.