கலைமொழி -முத்து 24 (பாரதியாரின் பிறந்த நாள் புதிர்)
இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.
ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம். ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம். ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.
இங்கு மறைந்துள்ள செய்தி மகாகவி பாரதியாரின் மிகப் பிரபலமான தேசீய கீதம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள்.
கலைமொழி புதிர்களுக்கு இதுவரை 10-க்கும் குறைவான அன்பர்களே விடை அனுப்பியிருக்கிறீர்கள். இது நாம் எல்லோரும் நன்கு அறிந்த, பள்ளி நாட்களில் ப்டித்தும், பலமுறை, பலவிதமாகப் பாடியும் மகிழ்ந்த பாடல். பாரதியின் பிறந்த நாளான இன்று அவர் நினைவாக அன்பர்கள் எல்லோரும் (30-க்கு மேற்பட்டவர்கள்) விடை கண்டு பிடித்து அனுப்புவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்!
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 23 விடை: துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு! இதைத் துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில் துலங்கிடும் தனி செழிப்பு!
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 11 பேர்)
வைத்தியநாதன், பாலசந்திரன், ராமராவ், வேதா, மனு, ராமையா, ஷாந்தி, மீனாக்ஷி சுப்ரமண்யன், நாகராஜன், 10அம்மா, யோசிப்பவர்,
Comments
Post a Comment