வண்டல் குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_2
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.
ஒரு கட்டத்தைத்
தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம்.
நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப்
பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது
நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை
puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.
வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
குறுக்காக:
1.வண்டல் களைய ஊர் கடைசி சுற்றி உறங்கவா? (5)
4.நாக்கின் பின் எருது திரும்ப விரும்புமா? (3)
6.அங்குலம் ஐந்தில் மூன்று பழுதில்லா இனம் (3)
7.மூன்றடிச் செவி வெல்லம் சேர்ந்தது (5)
8.தடவிக் கொடுத்த தலை தெறிக்க ஓடிய பாதி வருடம் (4)
9.கை வலை பின்னிப் பேச்சு வழக்கில் பறிக்கவில்லை (4)
12.2-நெடுக்கில் உள்ள பறவை பாடி மறைந்து சிவந்து அந்தி வெயிலில் தெரியும் (5)
14.முடிவற்ற யானை பின்னே தலையற்ற காக்கை உடம்பு (3)
16.முனைய வேண்டியது கண்ணன் விளையாடிய நதி (கரந்துறைமொழி; anagram) (3)
17.சிற்றன்னை ரமா போட்டது படமா? (5)
நெடுக்காக:
1.ஐம்பது பலம் உயர்த்து (3)
2.பானம் சுற்றி வா சிறுபெண்ணே காண்போம் ஆகாயத்தில் பாடும் பறவை (5)
3.ஒன்றைக் கை சுற்ற ஆடுவது (4)
4.முடிவில்லா மூக்குக்கு விதையில்லா திராட்சை தரும் ஊர் (3)
5.வேலையாளாம் மாது யாம் சொல்லாமல் பணி தீராது (5)
8.(அணை உடையாமலிருக்க) உபாயம் பண்ண (தண்ணீரை) வழியசெய் (கரந்துறைமொழி;anagram) (5)
10.நிமிர்ந்த தலைவன் காப்பியம் (5)
11.சாம்பசிவனிடம் உள்ள நதி கங்கையா? இல்லை. ஆப்பிரிக்காவில் உண்டு (4)
13.ஔவையார் படம் எடுத்தவரைப் பிடித்த மோப்பம் (3)
15.நன்றிக்கடன் முடிக்காத மிருகம் (3)
| |
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
பார்த்தசாரதி
ReplyDeleteAll clues were interesting. (கவரலை மட்டும் கவரவில்லை)
கவரவில்லையா? கவிழவில்லயே?
பாராட்டுக்கு நன்றி.