கிரமமாய் குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஃபிப்ரவரி

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால்  இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும்  படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.

வார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :
http://www.tamilvu.org/library/dicIndex.htm
http://agarathi.com/index.php
http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/ குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஃபிப்ரவரி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1. கிரமமாய் கிடைப்பது சராசரி வரன். ராசன் இல்லை (4)
5.கந்தனை சிறை செய்க. கறை போக யோசி! (4,3)
7.கூட்டமாக சுதந்திர நன்னாளாகதான் இருந்தும் சுநந்தன்னாதான் வரவில்லை. (4)
8.நேர்காண்: பந்துடன் சொல். (3,2)
9.பெரும்பாலும் பகலவன் மாறி ஆவணி கடைசியில் எட்டிப்பார்ப்பது. (4)
11.விட்டுக் கொடுத்து மகராஜன் தலைக்குப் பின் கொட்டு (4)
12.அடி தடி மாறிய அக்கணம் தோன்றும் பீடபூமி. (5)
14.மிக வருந்தி தலை போக வேதங்களைக் கற்றுணர்ந்தவன். (4)
16.மாதவரம் அடைந்தே பலகாரம் செரித்துத் தாயை வணங்குவோம். (3,4)
18.திங்கள் சூழக் கொடுக்க சிறந்த பெண்மணி. (4)

நெடுக்காக:
1.கடுகு நடுவைச் சுற்றி சப்பாத்தி ஓரங்கள் சேர்ந்த வேகம். (3)
2.முடிவற்ற அழகை அனுபவிப்பவன் சேர்ந்த நேரம் ஒரு பட்டம். (5)
3.போர் வெல்லும் கிழங்கு! (2)
4.ஊர்வலம் விலகிச் செல்ல வட்டமிடு. (6)
6.செருக்குண்டு ருக்கு போக மல்லி உருண்டது. (3)
8. கலைஞர் பாதி பிறை நிலா. (2)
9.பந்தயத்திற்கு வாங்கும் தொகை - பெரும்பாலும் பயந்தவரிடம். (6)
10.ஆலமரம் பூக்கவில்லை. எஞ்சியது இல்லை இல்லை. (2)
11. வயலும் வயல்சூழ்ந்த இடமும் கொண்ட நிலப் பொடி? இல்லை. தமிழ்ப் பெண்! (5)
13.பல்லால் செய்; செய்தே முடிவைச் சேர். விடை எளிதல்ல! (3)
15.மெய்ம்மறந்த முடிவற்ற சிட்டு துள்ளல் பூசனைக்குரியது. (3)
17. சுய கௌரவம் பார்ப்பவர் மரியாதை குறைத்த மாங்கனி. (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

  1. இந்தப் புதிரில் இரண்டு குறிப்புகளுக்கு அதிக விவரம் தேவையெனத் தெரிகிறது. புதிரின் சுட்டியும், தொடர்பு கொண்ட குறிப்புக்களும் பின் வருமாறு:
    http://muthuputhir.blogspot.com/2014/02/2014.html

    11.விட்டுக் கொடுத்து மகராஜன் தலைக்குப் பின் கொட்டு (4)
    4.ஊர்வலம் விலகிச் செல்ல வட்டமிடு. (6)

    11-ல் கொட்டு என்பது தேள் செய்யும் செயலாகவும் இருக்கலாம்; வேண்டுமென்று தலையில் தண்ணீர் விடுவதாகவும் இருக்கலாம்; குடி பானத்தைக் கை தவறி, கொஞ்சமாகத் தரையில் அல்லது சாப்பாட்டு மேசையில் சாய்ப்பதாகவும் இருக்கலாம். இவற்றில் சரியான சொல்லை எடுத்தால், 4 விடை தெரியும். கிடைத்த சொல்லுக்கு அகரமுதலியில் பொருள் கண்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளலாம்.

    மேலே சொன்னபடி 4-க்கு விடை கண்டுபிடித்துவிட்டு, 11-க்கு விடைதேடலாம். இந்தச் சொல் அகராதியில் இல்லை - தேவையும் இல்லை. பிற்பாதி பேச்சு வழக்கில் வரும்.

    இது வரை விடை அனுப்பிய 10 பேரில் இருவர் முற்றும் சரியாகக் கண்டு பிடித்துவிட்டனர். மற்றவர்கள் 4-க்கு பாதி சரியாகக் கண்டுபிடித்துவிட்டனர்.

    ReplyDelete
  2. Anyways, wonderful clues and below are the ones I liked the most.
    8.நேர்காண்: பந்துடன் சொல்.
    11.விட்டுக் கொடுத்து மகராஜன் தலைக்குப் பின் கொட்டு (struggled a lot with this and with the clue you gave I was able to find the answer)
    12.அடி தடி மாறிய அக்கணம் தோன்றும் பீடபூமி (தக்காணம்-னு தான் இது வரைக்கும் தெரியும், இப்போது தான் அதை தக்கணம் என்றும் கூறலாம் என்று தெரிந்தது-ங்க )
    14.மிக வருந்தி தலை போக வேதங்களைக் கற்றுணர்ந்தவன். (even though I got the answer right in my first attempt, you cleared me how that relates to the second clue)
    18.திங்கள் சூழக் கொடுக்க சிறந்த பெண்மணி
    3.போர் வெல்லும் கிழங்கு!
    10.ஆலமரம் பூக்கவில்லை. எஞ்சியது இல்லை இல்லை.
    13.பல்லால் செய்; செய்தே முடிவைச் சேர். விடை எளிதல்ல!

    அன்புடன்,
    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2