முடியாத கதை - 1

மாரடைப்பால் பாதிக்கப் பட்ட ஒரு நடுத்தர வயது பெண் மருத்துவமனைக்கு எடுத்துச்  செல்லப் பட்டார்.   சிகிச்சை அறையில் இருக்கையில் அவருக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டது :   அவரது காவல் தெய்வம் தட்டுப் பட்டார். 
”என் காலம் முடிந்து விட்டதா” என்று கேட்க, 
காவல் தெய்வம் அவள் வாழ இன்னும்  40 ஆண்டுகள் உள்ளன என்றது .

உடல் நலமடைந்த அந்தப் பெண்மணி மருத்துவமனையில் மேலும் சில நாட்கள் தங்கி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் தன் தோற்றத்தை மெருகு படுத்தித் தலைமுடியின் நிறத்தையும் மாற்றி இளமைஉருவம் பெற்றுக்கொண்டார்.  இவ்வாறு மீதமிருக்கும் ஆண்டுகளை நன்கு பயன் படுத்த எண்ணினார். 

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் செல்ல வெளியே வந்தவுடன் வேகமாக வந்த ஒரு ஆம்புலன்ஸ் மோதி இறந்தார்..

பரலோகம் சென்றபோது .....  இங்கு தொடருகிறது!

Comments

  1. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2