கலைமொழி -முத்து 10 (கலைக் குறள்)

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல்  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

இம்முறை, திருக்குறளின் ஒரு அதிகாரத்திலிருந்து** இரண்டு குறள்கள் கலைத்துக் கொடுக்கப்
பட்டிருக்கின்றன. செய்யுள் வடிவத்திலிருந்து மாற்றப்பட்ட வடிவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

உ -ம்:

செய்யுள் வடிவம்:

பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னெல்லாரு மெள்ளப் படும்

மாற்றப்பட்ட வடிவம்:

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
** அதிகாரம் தெரிந்தால் எளிதாக இருக்குமோ?  இங்கு  (http://muthuputhir.blogspot.com/2012/08/22.html) போய் முயன்றால் அதிகாரம் கண்டுபிடித்துவிடலாம்:
*****புதிது*********புதிது********புதிது*******புதிது*****************
வேடிக்கைக் கணக்கு/புதிர்கள்:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)
*****புதிது*********புதிது********புதிது*******புதிது*****************



முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)


மேலே காணும் பெட்டியில் உங்கள் விடை தெரியும்.  அதை நகல் எடுத்து, பின்னூட்டம் (comment) மூலமோ மின்னஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும்.  

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 9   விடை:

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே-உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா- நீ
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா


பாடல் முழுதும் (வரிகள்):


http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/neelamalai-thirudan/sathiyame-latchiyamai.php

திரைப்படம்: நீலமலைத் திருடன்

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இயற்றியவர்: ஏ. மருதகாசி

இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1957

சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 11 பேர்; 2 புதுமுகம்)
ராமாராவ்,  சேதுராமன் அனந்தகிருஷ்ணன் (புதுமுகம் - நல்வரவு!),மாதவ், இளங்கோவன், வேதா, சாந்தி, சுரேஷ் பாபு, Ramachandran Vaidyanathan, யோசிப்பவர், மீனு ஜெய், பாலச்சந்திரன் (புதுமுகம்-நல்வரவு!): 

அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2