குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_8 விடைகள்




விடைகள் சிவப்பு நிறத்தில் காட்டப் பட்டிருக்கின்றன; விளக்கம் சாய்வு, அடிக்கோடிட்ட எழுத்துக்கள் மூலம் தெரியும்)

குறுக்கு:
1 (5) சந்திப்பு: சுல்தானை விலக்கிய மைசூர் மன்னர்  (திப்பு)சந்தடி பாதி  (சந் ) யுடன் கூடுமிடம் (=சந்திப்பு).
4 (2) நதி: இடை சென்ற மககேசன் வாகனம் (= நந்தி - தி= நதி) ஆறு (=நதி)
6 (4) குறிப்பு: குப்பு இரண்டாம் இடத்தில் கதறி முடிவு (= றி)சேர்க்கும் சைகை.(=குறிப்பு)
7 (4) பேச்சடங்குவதில் அடங்கியது காரியம் (= ) சடங்க
9 (5) திதித்தது: கனி கொண்டு (= திதித்தது) துதித்தது துதி மாறியது  ( = துதித்தது - து +தி)= திதித்தது
12 (4) தாரையடி: நீண்ட ஊதுகுழலின் (இசைக்கருவியின் = தாரை) அடிப் பாகமா? இல்லை பெண்ணே  (அடி)! இது கவிஞர் பார்வையில் தண்மதியின் காதலிடி (=தாரை) + அடி! (=தாரையடி)
14 (4) வியக்க: அதிசயிக்க தக்க காவியக்கலை காலை மறைந்தது = காவியக்கலை - காலை = வியக்க
17. மாதா திரும்பினாள் தானாக (2) (= தாமா)
18 (3,2) பிரான் மலை: தலைவன்   (= பிரான்)பின்னே வந்த மலை வள்ளல் பாரி ஆண்ட பகுதி(= கொள்ளிமலை = பிரான் மலை)
 நெடுக்கு:

1 (3) சருகு: மெய் போக சருக்கும் காய்ந்த இலை  (சருக்கும் - க், ம் (மெய் போக) = சருகு)
2 (5) திருப்பதி: தாயார் குடி கொண்ட தலம் ஏழில் ஒன்று சேர்ந்த திருப்தி . ஏழில் ஒன்று ( == ஏழு ஸ்வரங்களில் ஒன்று)சேர்ந்த திருப்தி ( = திருப்தி+ப =திருப்பதி) .
3 (3) புரு: யயாதிக்கு இளமை ஈன்றான்: இடைஇழந்து புத்துரு ( = புத்துரு -த்து => இடை இழந்து) கொண்டான்; தந்தைக்குத் தன் இளமை ஈன்றான் (= புரு)
4 (3) நட்ட: சிவவாக்கியர் வாக்கில் பேசாத கல் (= நட்ட கல்)இறுதி இழந்த இழப்பு  (=நட்டம் -ம் = நட்ட)
5 (4) வெகுமதி: அதிக புத்தி (= வெகு மதி)பரிசு (=வெகுமதி). (4) = வெகுமதி
7 (3) சரித: மூன்று ஸ்வரம் ( = ச, ரி, த)தரும் முடியாத சரித்திரம் (= சரிதம் - ம் = சரித)
8 (4) மந்தாரை: மலருந்தாமரை மலருடன் மறைந்தால் மலரும் மலர். (4) (மலருந்தாமரை - மலரு = மந்தாரை)
10 (3) திண்டி: தினம் வண்டி மாறி வரும் ஊரில்  ( = திண்டிவனம்)காடு நீக்கினால் கிடைப்பது ( = திண்டிவனம் - வனம் = திண்டி))உணவு!(=திண்டி)
11 (5) துய்யவன்: வயதாய் துன்பம் சேர்த்து தாபம் நீக்க ( = வயதாய்  + துன்பம் - தாபம் = துய்யவன்)வெளிவருவான் புனிதன் (=துய்யவன்)

13 (3) யம்மா: வியப்பு (= யம்மா)சுழன்ற மாயம் (= மாயம் <=>யம்மா)
15 (3) கவலை: வருத்தம் கலை நடுவே தலையிடும்  (= கலை + வருத்தம் தலை = க வ லை)
16 (2) கோபி: பசு (= கோ)பைத்தியம் ( = பித்து)ஆரம்பம் (=பி) சினம் கொண்டவன் (=கோபி) (2).


பங்கு கொண்டு ஆதரித்தவர்கள் (15 பேர்):

ராமராவ், யோசிப்பவர், வைத்தியநாதன், 10அம்மா, ராமையா, சௌதாமினி சுப்ரமண்யம், கதிர்மதி (புது முகம்!), சசி பாலு, பார்த்தசாரதி, நாகராஜன், மாதவன், ஹரி பாலகிருஷ்ணன், சாந்தி,பவழமணி பிரகாசம் (புது வருகை!), நாகமணி ஆனந்தம் (புது வருகை)

அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.    

பின்னூட்டக் குறிப்புகள்:
வீ. ஆர்.  பாலகிருஷ்ணன்

உயர் திரு முனைவர் அவர்களுக்கு,
வணக்கம் பல.  விடைகள் பின் வருமாறு.   கால தாமதத்தை ஈடு  செய் யும்  படியாக அனைத்து குறிப்புகளும் வெகு அருமை.  சிவவாக்கியர்  நட்ட நந்தியை பேச வைப்பதற்கு நான்கு மணி நேரம் பிடித்தது..  மிகவும் ரசித்த குறிப்புகளில் இதுவும் ஒன்று.

Parthasarathy Srinivasan

An enjoyable crossword. Liked Across-1 & 18 (had to google to get the answer) & Down 5 & 16.

யோசிப்பவர்

இந்த முறை நிறைய அருஞ்சொற்கள் - திதித்தது, துய்யவன், திண்டி
சரித - தமிழ் சொல்தானா?!?
திருப்பதி - too obvious

சரிதம் = சரித்திரம்; தம்ழ்ச் சொல்லே.   முடியாத சரித்திரம் = சரித;  சரியா?

முத்து

kathirmathi   
8 Down was nice

Thanks for participating and for your appreciative comment.

Sorry for 7 down; did not realize that I should not use incomplete words.  Thanks for bringing it to my attention.

Dear Muthu sir,

Well and wishing you the same. I can see your hard work you mentioned in your email in this puzzle :)... Lot of wonderful clues and some of them are hard to crack as well. Here is my first attempts. Couldn't find the answers for two of them yet though :(. Let me know if the answers are correct and I may need to bother you to give additional clues for the ones I don't find the answer yet :)

Great job and keep up the great work-nga sir.

Anbudan,
Nagarajan Appichigounder.
                  

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2