குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013- டிசம்பர் விடைகள்
|
குறுக்காக:
1.மாசிலா சத்துமாவு தரும் மருந்துக்கல். (5) சிலாசத்து
4.அணிவது முறி. (2) உடை
6.இடம் இடை புகுந்த கழியா? வேலா! (4) கடம்பா (கம்பா + ட)
7.இடைக் குணம் கொண்ட நரி கயிறாகும். (4) சணம்பு (சம்பு = நரி; சணம்பு = சணல்)
9.முன்பு காணாததாய் நூதன தாகம் முடியவில்லை. (5)
புதிய தாக
12.கொடுப்பாயா ”கேட்க” உற்ற சமயமா? (4) தறுவாயா (தருவாயா, தறுவாயா ”கேட்க ” ஒரே ஒலி)
14.நம் அகம்மது வீடு போனால் நமக்குச் சொந்தம். (4) நம்மது
17.பழுப்பு நூற்பட்டை ஆந்திரத் துறைமுகமானது. (5) காக்கிநாடா
18.11 நெடுக்கு விடை சரமாகும் அந்திப்பொழுது. (2) மாலை
நெடுக்காக:
1.உண்ணத் தொடங்காமல் மாட்ட. (3) (பு சிக்க)
2.சம்பு, பாலா, வணக்கம் தலைவா! (3,2) சலாம்பாபு
3.அதிகாரி உள்ளே வந்துரைத்தார். (2) துரை
4.சாப்பிட முடியாத திங்கள். (3) (திங்கள் = திங்க =உண்ண)
5.கராச்சிக்கு நேர் மேற்கே தண்ணீர்க் கரைகள் தொடர நிலைநாட்டு நகரம். (4) அபுதாபி (அப்பு = தண்ணீர்; தாபி = ஸ்தாபி = நிலைநாட்டு)
7.பாதி ஆற்காட்டு நவாப் கட்டவேண்டிய தொகை. (3) சந்தா
8.(பேச்சு வழக்கில்) வந்தபோது சிவந்தக்கால் உள்ளே கண்டேன். (5) வந்தக்கா
10.பெண் பெயர் சுற்ற விதியா. (3) திவியா
11.சுதி (த) சேர்ந்த கொடிமரமா (கம்பமா)? பூச்சரத்தில் இருப்பதா? (5) கதம்பமா
13.சொல்வேந்தரை உரிமையுடன் அழைக்க விஷம் கக்கிய பாம்பு வரும்! (3) வாசுகி
15.முழங்காலுக்கும் இடுப்புக்கும் இடையே துவட்டு. (2) துடை
16. விரும்பா தேசமா (2) நாடா
|
Comments
Post a Comment