குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜனவரி: விடைகள்


Monday, December 16, 2013

  0/0  


குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜனவரி:  விடைகள்

ஜனவரி குறுக்கெழுத்துப் புதிருக்கு பலரிடமிருந்தும் மிகுந்த ஊக்கமளிக்கும் சொற்கள் வந்தன.  அவற்றைப் பகிர்ந்து கொண்டு, அனைவருக்கும் நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.



உங்கள் அனைவரின் எதிர்பார்ப்புக்கு தகுதி குறையாமல் புதிர்களை
அமைத்து வெளியிட ஆண்டவன் அருள் வேண்டுகிறேன்.


புதிருக்கு விடைகள் பின்னே இருக்கின்றன.


இது என் இளம்பெண்ணோடு இணையும், உயிர் முதல் விட்டு முழுமுதல் சேர்ந்த் அயற்சி. மன்னிக்கவும். சகவாச தோஷம். கன்னிமுயற்சி. எல்லா விடையும் சரியாக இருக்க இறையை இறைஞ்சுகிறேன். :) ஆக்கப்பூர்வமாக பொழுது போக்க உதவியமைக்கு நன்றி!!  -- Tamil

************************************

அதிகாலை ஆரம்பித்தேன். சொல்ப(மே) வந்ததால் அனாதரவா விட்டேன். களேபரம் ஒன்றுமில்லை துணிவாக திரும்பிவா என அழைத்தது திருமணம் செய்த யுவதியா, அத்தையா? முடித்தபின் முத்துவிற்கு ஒருகையா பலகையா என வியந்தேன். மொத்தத்தில் சொக்க வைத்த கரும்பாலை. நீதிபதியாக இருநத நான் சொல்கிறேன். இக்குறுக்கெழுத்திற்கு தங்கநகை தரலாம். இயலாததால் முத்துவை வாழ்கவே என்று வாழ்த்துகிறேன்.
நன்றி
பார்த்தசாரதி
************************************
Vanakkam Muthu sir. Well and wishing you the same. Wow... what a start to the new year. Very well done. wonderful clues and some of them made me to think a while to get it. Kalaeparam-na udal-nu solli thanthatharku nandri :) and also for kachchanthi - konippai. :)
************************************
Almost liked all the clues very much. Migavum rasiththavai:
Kurukkaaga - 1, 4, 7,
Nedukkaaga - 2, 3, 4, 5, 13
Anbudan,
Nagarajan Appichigounder.
************************************
நிறைய குறிப்புகள் அருமை! சில குறிப்புகள் ரொம்பவே spoon feedingகா(வாழ்கவே) இருந்ததுதான் என்னளவில் மைனஸ்.
- யோ
************************************

Thanks for giving an interesting puthir  -- K.R.Santhanam

************************************

அருமை. -- vadakarai velan

************************************

மிக்க நன்றி,

          களேபரம் என்ற சொல் குறிப்புக்கு உள்ளேயே இருக்கிறது. ஆனால் அதற்கு கலவரம் என்றுதானே பொருள் ? உடல் என்ற பொருளும் உண்டா ?அன்புடன்  ராமய்யா நாராயணன்



அகராதியில் அந்தப் பொருளே இருக்கிறது; கலவரம் என்று பொருள் இல்லை!

பார்க்க:

http://www.tamilvu.org/library/dicIndex.htm

சொல்

அருஞ்சொற்பொருள்

களேபரம்

உடம்பு ; எலும்பு ; பிணம் ; குழப்பம் .

http://dsal.uchicago.edu/dictionaries/fabricius/

களேபரம் (p. 216) [ kaḷēparam ] {*}, s. corpse, பிணம்; 2. bones, எலும்பு; 3. body, உடல். Also களேவரம்.

களேபரம்பண்ண, to make much noise as at funerals.

************************************

miga nanru!  --  Nagamani

************************************

 

விடை அனுப்பியவர்கள் (19 பேர்):

தமிழ், நாகராஜன், சாந்தி, தினேஷ் குமாரராமன், வடகரை வேலன், யோசிப்பவர், வைத்திய’நாதன், ராமையா, சுரேஷ் பாபு, ராமராவ், பார்த்தசாரதி, நாகமணி ஆனந்தம், பவளமணி பிரகாசம், மாதவன், கே. ஆர். சந்தானம், V.R. பாலகிருஷ்ணன்,G.. K. சங்கர்,  M.  பாலசந்திரன், சௌதாமினி சுப்ரமண்யம்

அனைவருக்கும் நன்றி.


புதிராக்கம்:மீ. முத்துசுப்ரமண்யம்
1
னா
2
3
வா

4
சொ
க்
5
த்

ங்

ழ்

ல்

ரு
6
தை
க்

7
ளே
ம்



வே



பா
8
கை
யா

9
10
தி
கா
லை

  க்



11
நீ

ரு


12
ச்
13
ந்
தி

14
ரு
15
து
வா




ணி
16
யு
தி

17
தி
ரு
ம்
பி
வா
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:
1.உதவியின்றி பாதி அன்னாசி கொடுக்கவா? (5)
4.கண் மயங்க பாதி பிரம்படி பட்ட பெருமாள். (3)
6.பொத்தல் மூட தொடங்காத யாழ்ப்பாணத்தில் பேச. (3)
7.உலகங்களே பரம்பொருள் உள்ளே உடல். (5) (தெரிந்த சொல், தெரியாத பொருள்)
8.ஒன்றுக்கு மேற்பட்ட கையா செய்தி தெரிவிப்பது? (4)
9.விடியும் பொழுது அலை நடுவே சிக்கிய கதர்த்துணி. (4)
12.முச்சந்தி முதலுக்கு கடை முதல் மாற்ற வரும் கோணிப்பை. (5)
14.மெய் நீக்கிய மருந்து காட்டும் மரம். (3)
16.இலையுதிரும் நடுவின் நடுவே வந்த முதல் இளம்பெண். (3)
17.மீண்டுவா! விரைதலை விட்டு திரைமுதல் சேர விரும்பிவா! (5)

நெடுக்காக:
1.அந்தப் பொருளைக் காட்டும் மாமியார். (3)
2.பாதுகாக்கப்பட வேண்டியது போகாதிருக்க சிரி (5)
3.கலை முதல் கொண்ட வாழ்வே வாழ்த்து (4)
4.குறைந்த பேச்சுடன் படைத்தலைவன் சேர்ந்தான். (3)
5.கரிய பாலைக் கொண்டு வெல்லம் எடுப்பர். (5)
8.முன் பின் இல்லாத வாயு ஒரு நோய். (5)
10. ஸ்ரீவாசம் கல்யாணம். (5)
11.நீதியின் கணவர் தீர்ப்பளிப்பார் (4)
13.சூழ்ச்சிக்கு நடுவே 1 சேறு. (3)
15.ஆடையே வருக. அச்சமில்லையா? (3)

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2