கலைமொழி -முத்து 58 (கலைக் குறள்)

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.
ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல்  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
இம்முறை, திருக்குறளின் ஒரு அதிகாரத்திலிருந்து** இரண்டு குறள்கள் கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. செய்யுள் வடிவத்திலிருந்து மாற்றப்பட்ட வடிவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
உ -ம்:
செய்யுள் வடிவம்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவா

னெல்லாரு மெள்ளப் படும்

மாற்றப்பட்ட வடிவம்:
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்


** அதிகாரம் தெரிந்தால் எளிதாக இருக்குமோ?  இங்கு   போய் முயன்றால் அதிகாரம் கண்டுபிடித்துவிடலாம். 



”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்   உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு  மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் 
பார்க்க:
http://tinyurl.com/kalaimozi

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-

http://free.7host07.com/yosippavar/kalaimozhi/

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை   விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை  உடனடியாக அறிந்து கொள்ள     
 https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en   
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து  கொள்ளுங்கள்.

Comments

  1. April 12 வரை விடை அனுப்பியவர்கள்: நாகராஜன், தமிழ், ராமராவ், வைத்தியநாதன், சாந்தி, வேதா முத்து; இவர்களுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2