காசியில் விசாலாட்சி மதுரையில் மீனாட்சி இவர்களுக்குச் சமமானவள்!
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை
தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல்
(inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம்
அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய
அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள்
குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
சொல்கலை - முத்து 46 விடைகள்:
1) சந்தனக் காற்று 2) பொறுத்தது போதும் 3) வேலுண்டு வினையில்லை 4) நல்லவன் 5) தாயகம் இறுதி விடை: காவியத் தலைவன்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 9 பேர்): ராமராவ், சாந்தி, வைத்தியநாதன், நாகமணி ஆனந்தம், 10அம்மா, சௌதாமினி சுப்ரமணியன், நாகராஜன், தமிழ் முகில் பிரகாசம், மீனாக்ஷி சுப்ரமணியன் இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
விதிகளும் வழிமுறையும்: 1. முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) 2. இங்கு ஒரு செய்தி மறைமுகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது: எழுத்துகள் நெடுக்கு வாட்டத்தில் (மேலும் கீழுமாகக்) கலைக்கப் பட்டிருக்கின்றன. அவற்றைச் சரிப்படுத்தி, மறைவாகக் கொடுக்கப் பட்டிருக்கும் செய்தி என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும் ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும். அதாவது: எந்த எழுத்து இடம் மாறி இருக்கிறதோ அதை முதலில் தட்டி, பிறகு அது எங்கு இருக்க வேண்டுமோ அந்தக் கட்டத்தைத் தட்டினால் அந்த இரண்டு எழுத்துகளும் இடம் மாறும். வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும். அவற்றை இடம் மாற்றக் கூடாது. எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம். புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” (Completed) என்னும் பொத்தானை அழுத்தினால்,
புதிர் அமைப்பும் குறிக்கோளும்: கட்டங்களில் ஒரு செய்தி கலைத்துக் கொடுக்கப்படும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம். நெடுக்காக மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு) 1. இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும். 2. நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக் கட்டங்களைத் தாண்டியும் மாற்றப்படலாம். 3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க, அடிப்படைத் தமிழ் இலக்கண அறிவே போதும். உதாரணமாக, மெய் எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா. அதே போல் உயிர் எழுத்துக்கள் சொல் இடையிலும், கடைசியிலும் வாரா. 4. வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும்
முதன்முறை முயல்வோரருக்கு மாதிரிப் புதிர் (விடையுடன்) கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது : இங்கு கலைக்கப்பட்டிருக்கும் எழுத்துகளை, நெடுக்கு வாட்டத்தில் இடம் மாற்றி மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும். வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும். இந்த வெற்றுக் கட்டங்களை இடம் மாற்றமுடியாது. எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம். புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துக் குறிப்பிட்ட முறையில் புதிராளிக்கு அனுப்பவும். $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில
சுஜி, சரியான விடைகள் அனுப்பியதற்குப் பாராட்டுகள்!
ReplyDeleteநாடி, சரியான விடைகள் அனுப்பியதற்குப் பாராட்டுகள்!
ReplyDelete